செய்திகள்
மகள் காதல் திருமணம் செய்ததால் தூக்கு போட்டு தந்தை தற்கொலை
மகள் காதல் திருமணம் செய்ததால் தந்தை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வடமதுரை:
திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது38). இவரது மகள் பிரியா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அப்போது முதல் மிகுந்த மன வருத்தத்தில் லட்சுமணன் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து அவரது மனைவி மீனா வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews
திண்டுக்கல் அருகில் உள்ள அய்யலூர் குறிஞ்சிநகரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது38). இவரது மகள் பிரியா. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அப்போது முதல் மிகுந்த மன வருத்தத்தில் லட்சுமணன் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டிய நிலையில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து அவரது மனைவி மீனா வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் அங்கு வந்து லட்சுமணன் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews