செய்திகள்

கூடலூர் குண்டல்பேட் அருகே தடுப்பு சுவரில் மோதிய பஸ் விபத்தில் கண்டக்டர் பலி

Published On 2018-01-30 11:22 GMT   |   Update On 2018-01-30 11:22 GMT
கூடலூர் குண்டல்பேட் அருகே தடுப்பு சுவரில் மோதிய பஸ் விபத்தில் கண்டக்டர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கூடலூர்:

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் இருந்து சுல்தான்பத்தேரி, குண்டல்பேட் வழியாக பெங்களூருக்கு கேரள அரசு பஸ் அதிகளவில் இயக்கப்பட்டு வருகிறது.

நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு குண்டல்பேட் வழியாக கேரள அரசு பஸ் வந்தது.

அதிகாலை கூடலூர் அருகே உள்ள குண்டல்பேட் கக்கல் தொண்டி பகுதியில் பஸ் வந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பஸ்சின் முன்பக்கம் மற்றும் பின்பக்க சக்கரங்கள் கழன்று ஓடின. இடிபாடுகளில் சிக்கி 10 பயணிகள் காயம் அடைந்தனர்.

மேலும் டிரைவர் இருக்கை அருகே இருந்த கண்டக்டர் சிஜூ (38) படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் விபத்து குறித்து குண்டல்பேட் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

கர்நாடக போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். ஆனால் கண்டக்டர் சிஜூ பரிதாபமாக இறந்தார். 10 பயணிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

விபத்தில் பலியான கண்டக்டர் கோழிக்கோட்டை சேர்ந்தவர். விபத்து குறித்து குண்டல்பேட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து நடந்ததிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News