முதலியார்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை
புதுச்சேரி:
புதுவை முதலியார்பேட்டை உடையார்தோப்பு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வாசு, கூலித்தொழிலாளி.இவரது மனைவி சுகன்யா (வயது24). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில நாட்களாக சுகன்யா உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதி அடைந்து வந்தார். ஆஸ்பத்திரியில் காண்பித்தும் நோய் குணமாகவில்லை. இதனால் மனவேதனையில் சுகன்யா இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் சுகன்யாவுக்கு நோய் கொடுமை அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த சுகன்யா தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார். அக்கம்பக்கத்தினர் பார்த்து சுகன்யாவை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சுகன்யா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.