பூதப்பாண்டி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி
நாகர்கோவில்:
பூதப்பாண்டி அருகே பெருந்தலைகாட்டை அடுத்த உலக்கை அருவி பகுதியைச் சேர்ந்தவர் சக்திகுமார், (வயது 28), கூலித்தொழிலாளி.
இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று மாலை சக்திகுமார் வேலைக்கு சென்று விட்டு தனது மோட்டார் சைக் கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
உலக்கை அருவி அருகே சாஸ்தான் கோவில் பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் சக்தி குமாரின் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டில் தாறு மாறாக ஓடியது. திடீரென ரோட்டோரத்தில் நின்ற மின்கம்பம் மீது மோதியது.
சக்திகுமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். தலை மற்றும் உடல் பகுதியில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. சிறிது நேரத்தில் சக்தி குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து பூதப்பாண்டி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சக்திகுமாரின் உடல் பிரேத பரிசோதனை நடக்கிறது. #tamilnews