search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் வாலிபர் பலி"

    • சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாமரத்துபாளை யம் சக்தி நகரை சேர்ந்தவர் தினேஷ் (21). ஆயில் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து தனது மோட்டா ர் சைக்கிளில் தினேஷ் வந்து கொண்டிருந்தார்.

    வீரப்பன்ச த்திரம் பகுதியில் வந்து கொ ண்டிருந்தபோது திடீரென சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் படுகாயம் அடை ந்தார்.

    பின்னர் அவர் சிகி ச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு கொண்டு செல்ல ப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார்.

    இது குறித்து வீரப்பன்ச த்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாடு இழந்து ரோடு அருகே உள்ள சுவற்றில் மோதியது.
    • அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    காவேரிப்பட்டணம்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள தாளமடுவு எனும் கிராமத்தில் வசித்து வருபவர் அகிலன் (வயது29). இவர் சொந்தமாக தொழில் செய்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி ஒரு பெண் குழந்தை, ஒரு ஆண் குழந்தை உள்ளது.

    இந்நிலையில் அகிலன் நேற்று தனது சொந்த வேலையாக மலையாண்டஅள்ளி புதூர் சென்று விட்டு காவேரிப்பட்டணம் நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்போது மன்னன் நகர் எனும் இடத்தில் வளைவில் திரும்பும் போது எதிர்பாராத விதமாக பைக் கட்டுப்பாடு இழந்து ரோடு அருகே உள்ள சுவற்றில் மோதியது.

    இதில் தலையில் பலத்த அடிபட்டது. அவரை காவேரிப்பட்டணம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக உடல் கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது .

    இது குறித்து காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் முரளி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • நாய் ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே வந்து சதீஷ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • இதில் நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.

    சென்னிமலை:

    காங்கேயம், கோவை ரோடு, லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (22). இவர் சென்னிமலையை அடுத்த ஈங்கூர் பகுதியில் உள்ள சிப்காட் தொழில் பேட்டையில் ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.

    சென்னிமலையில் இருந்து காங்கேயம் செல்லும் ரோட்டில் உள்ள பசுவபட்டி பிரிவில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ரோட்டோரம் இருந்த நாய் ஒன்று திடீரென ரோட்டின் குறுக்கே வந்து இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் நிலை தடுமாறிய சதீஷ் மோட்டார் சைக்கிளில் இருந்து திடீரென கீழே விழுந்தார்.

    இதில் பலத்த காயமடைந்த அவரை கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

    இது பற்றி சென்னிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு விபத்துக்குள்ளா னது.
    • சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகேயுள்ள பனங்காடு முத்து கவுண்டர் தெருவை சேர்ந்தவர் கணேசன்.இவரது மகன் கார்த்திக் (வயது 22). இவரும் இவரது நண்பரான கோணம்பட்டி கோவிந்தராஜ் மகன் விஷால்(23) என்பவரும் மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

    மாரண்டஅள்ளி அரசு ஆண்கள் பள்ளி அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் தடம் புரண்டு விபத்துக்குள்ளா னது.

    இதில் சம்பவ இடத்திலேயே கார்த்திக் உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.படுகாயம் அடைந்த விஷாலை தருமபுரி அரசு மருத்துவமணியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ள னர். இந்த விபத்து குறித்து மாரண்டஅள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×