செய்திகள்

திருமாவளவன் குறித்து அவதூறு: நெல்லை அருகே வாலிபர் கைது

Published On 2018-01-13 08:19 GMT   |   Update On 2018-01-13 08:19 GMT
திருமாவளவன் குறித்து அவதூறு வீடியோ வெளியிட்ட நெல்லை அருகே வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை:

நெல்லையை அடுத்த தாழையூத்து அருகே உள்ள‌ ராஜவல்லிபுரம் மேலத்தெருவை சேர்ந்தவர் இசக்கிமுத்து என்ற ராஜா(வயது25). இவர் சமீபத்தில் வாட்சப்பில் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் இம்மானுவேல்சேகரன், திருமாவளவன் குறித்து அவதூறாக குறிப்பிட்டிருந்தார். 

இதுபற்றி தாழையூத்து போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் இசக்கிமுத்துமீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் தேடி வந்தனர். 

இந்த நிலையில் இசக்கிமுத்து சம்பவத்தன்று தென்கலம் விலக்கில் குறிச்சிகுளத்தை சேர்ந்த ஒரு வாலிபரை வழிமறித்து அரிவாளை காட்டி மிரட்டி பணம் பறித்தார். இதுபற்றி தாழையூத்து போலீசுக்கு தெரியவந்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இசக்கிமுத்துவை கைது செய்தனர். #tamilnews

Tags:    

Similar News