செய்திகள்

மனைவியை அவமானப்படுத்தியதால் கம்பி கட்டும் தொழிலாளி தற்கொலை

Published On 2018-01-11 12:56 GMT   |   Update On 2018-01-11 12:56 GMT
வில்லியனூர் அருகே உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் மனைவியை அவமானப்படுத்தியதால் கம்பி கட்டும் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புதுச்சேரி:

வில்லியனூர் அருகே செம்பியம் பாளையம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா (வயது 32). கம்பி கட்டும் தொழிலாளி.

இவர் நேற்று மாலை வடமங்கலத்தில் உள்ள தனது அக்காள் பூரணி வீட்டில் நடந்த மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சிக்காக தனது 2-வது மனைவி பானுவை (30) அழைத்து சென்றார்.

அப்போது ராஜாவின் தாய் மற்றும் உறவினர்கள் பானுவை ஏன் அழைத்து வந்தாய்? என கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து பானு தான் வரவில்லை என்று கூறியும் வற்புறுத்தி அழைத்து வந்து தன்னை அவமானப்படுத்தி விட்டதாக கூறி கணவரிடம் கோபித்து கொண்டு வில்லியனூரில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் ராஜா மன முடைந்தார். மனைவி அவமானப்படுத்தப்பட்டதை எண்ணி அளவுக்கு அதிகமாக மதுகுடித்தார். பின்னர் வீட்டுக்கு வந்த ராஜா மனைவியின் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்த புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் பெரியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews

Tags:    

Similar News