செய்திகள்

ஆரப்பாளையத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் தற்கொலை

Published On 2018-01-09 11:19 GMT   |   Update On 2018-01-09 11:19 GMT
ஆரப்பாளையத்தில் மனைவி இறந்த சோகத்தில் கணவர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்தார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

ஆரப்பாளையம் மஞ்சள் மேடு காலனியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது31), லாரி டிரைவர்.

இவருக்கும், மாரியம்மாள் என்பவருக்கும் கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. குழந்தை இல்லை. கடந்த 4 மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் மாரியம்மாள் இறந்து விட்டார்.

இதனால் கிருஷ்ணன் மனவேதனை அடைந்தார். மனைவி இறந்த சோகத்தில் யாருடனும் சரியாக பேசாமல் இருந்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வாழ்க்கையில் வெறுப்படைந்த கிருஷ்ணன் வி‌ஷம் குடித்து மயங்கினார்.

அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே கிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News