செய்திகள்
தமிழகம் முழுவதும் காங்கிரஸ் எஸ்.சி.பிரிவு ஆர்ப்பாட்டம்: செல்வப்பெருந்தகை
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் காங்கிரஸ் எஸ்.சி பிரிவு சார்பில் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
மத்திய பிரதேசத்தில் நடந்த மோதலில் தலித் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து மும்பையில் கலவரம் வெடித்தது. தலித் வாலிபர் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் 8-ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேசத்தில் ஒரு சமூகத்தினர் நடத்திய கொண்டாட்டத்தில் தலித் வாலிபர் கொல்லப்பட்டார்.
இதை கண்டித்து காங்கிரஸ் எஸ்.சி பிரிவு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். #TamilNews
மத்திய பிரதேசத்தில் நடந்த மோதலில் தலித் வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். இதையடுத்து மும்பையில் கலவரம் வெடித்தது. தலித் வாலிபர் கொல்லப்பட்டதை கண்டித்து தமிழக காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு சார்பில் 8-ந்தேதி (திங்கட்கிழமை) ஆர்ப்பாட்டம் நடை பெறுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் கு.செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பிரதேசத்தில் ஒரு சமூகத்தினர் நடத்திய கொண்டாட்டத்தில் தலித் வாலிபர் கொல்லப்பட்டார்.
இதை கண்டித்து காங்கிரஸ் எஸ்.சி பிரிவு சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். #TamilNews