செய்திகள்
நெல்லிக்குப்பத்தில் பிரேமலதா 4-ந்தேதி ஆர்ப்பாட்டம்
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து நெல்லிக்குப்பத்தில் பிரேமலதா தலைமையில் வரும் 4-ந்தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
சென்னை:
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் 4-ந்தேதி சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போராட்டம் நடக்கிறது. இதே போல ஆம்பரில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி தலைமையில் போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவைத் தொகையை வழங்காததை கண்டித்து தே.மு.தி.க. சார்பில் 4-ந்தேதி சர்க்கரை ஆலைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் போராட்டம் நடக்கிறது. இதே போல ஆம்பரில் துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டம் திருவேலங்காட்டில் முன்னாள் எம்.எல்.ஏ. கு.நல்லதம்பி தலைமையில் போராட்டம் நடக்கிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.