செய்திகள்

கோவை அருகே நாட்டு துப்பாக்கியுடன் வாலிபர்கள் கைது

Published On 2017-12-27 05:11 GMT   |   Update On 2017-12-27 05:11 GMT
கோவை அருகே நாட்டு துப்பாக்கியுடன் வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஓணப்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டார்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தார். அவர்களிடம் நாட்டு துப்பாக்கி இருந்தது. அதனை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தார்.

அவர்கள் சுண்டபாளையத்தை சேர்ந்த வடிவேல் (வயது 36), அஜ்ஜனூரை சேர்ந்த ராஜ்குமார் (22) என்பது தெரிய வந்தது.

தொழிலாளர்களான இவர்கள் இருவரும் வேட்டையாடுவதற்காக இந்த துப்பாக்கியை கொண்டு செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த துப்பாக்கியை அதே பகுதியை சேர்ந்த ஒருவரிடம் இருந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி உள்ளனர். இதன்மூலம் காட்டுப் பன்றியை வேட்டையாடி உள்ளனர்.

இதுகுறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், வடிவேல், ராஜ்குமார் ஆகியோர் மீது ஆயுத தடை சட்டப் பிரிவு 1959-ன் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News