செய்திகள்
திருமங்கலம் அருகே திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தற்கொலை
திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் திருமணமான 3 மாதத்தில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
பேரையூர்:
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பெரும்பாறையைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் காளிதாஸ் (வயது 30). இவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தும்பக்குளத்தைச் சேர்ந்த பாகத்தாள் (23) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் காளிதாஸ் மாமனார் வீட்டிலேயே தங்கினார். அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த காளிதாஸ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ள பெரும்பாறையைச் சேர்ந்தவர் பிச்சை. இவரது மகன் காளிதாஸ் (வயது 30). இவருக்கும் மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள தும்பக்குளத்தைச் சேர்ந்த பாகத்தாள் (23) என்பவருக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணத்துக்கு பின்னர் காளிதாஸ் மாமனார் வீட்டிலேயே தங்கினார். அவர் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று மீண்டும் அவர்களுக்குள் பிரச்சனை ஏற்பட்டது.
இதனால் விரக்தியடைந்த காளிதாஸ் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கூடக்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.