செய்திகள்
பாப்பிரெட்டிப்பட்டியில் கூலித்தொழிலாளி தற்கொலை
நோய் கொடுமையால் விரக்தி அடைந்த கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி கலைவாணர் நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது52). கூலித்தொழிலாளி. கடந்த 5 ஆண்டுக்கு முன்பு கிழங்கு அரைவு மில்லில் வேலைப்பார்த்த இவருக்கு அடிக்கடி மாரடைப்பும், உடல் நலம் குறைவும் ஏற்பட்டு வந்தது. இதனால் மில்லுக்கு செல்வதை நிறுத்தி விட்டு, கிடைக்கும் வேலைக்கு சென்று வந்தார்.
நோயினால் ஏற்பட்ட விரக்தி காரணமாக குடி பழக்கத்துக்கும் ஆளாகினார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாப்பிரெட்டிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தவேலு இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றார்.