செய்திகள்
வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சம்
வடமதுரை போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி தஞ்சமடைந்தனர்.
வடமதுரை:
நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 23). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவரது தங்கையை சிவகங்கை மாவட்டம் கருவேலகுறிச்சி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தனர்.
தனது தங்கையை பார்க்க செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த அமுதா (23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இந்த திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நத்தம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து சமாதானம் பேசி ஒற்றுமையாக வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
நத்தம் அருகே உள்ள மூங்கில்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (வயது 23). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தார். இவரது தங்கையை சிவகங்கை மாவட்டம் கருவேலகுறிச்சி கிராமத்தில் திருமணம் செய்து கொடுத்தனர்.
தனது தங்கையை பார்க்க செல்லும் போது அதே பகுதியைச் சேர்ந்த அமுதா (23) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு அது காதலாக மாறியது.
இந்த திருமணத்துக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் வீட்டை விட்டு வெளியேறி நத்தம் மாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர். போலீசார் இருவரது பெற்றோரையும் அழைத்து சமாதானம் பேசி ஒற்றுமையாக வாழும்படி அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.