செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

Published On 2017-11-29 03:44 GMT   |   Update On 2017-11-29 03:44 GMT
தெற்கு அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டுள்ளதால் தமிழகத்தில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் நிருபர்களிடம் கூறியதாவது:-

தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கை பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலைகொண்டு உள்ளது. இதன் காரணமாக தென் தமிழகத்தின் பல இடங்களிலும், வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.

மேலும் தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மற்றொரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் உருவாகும். பின்னர் அது வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறும். இதன் காரணமாக 2 நாட்களுக்கு (இன்றும், நாளையும்) தமிழகத்தில் பல இடங்களிலும், புதுவையில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஓரிரு இடங்களில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News