செய்திகள்

குழந்தையை பார்க்க விடாததால் வாலிபர் தீக்குளித்து தற்கொலை

Published On 2017-11-27 11:46 GMT   |   Update On 2017-11-27 11:46 GMT
குழந்தையை பார்க்க மனைவி விடாததால் மனமுடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

தர்மபுரி:

திருப்பூர் மாவட்டம் சாமலாபுரம் கலைஞர் நகரை சேர்ந்தவர் ராஜா. இவரது மகன் சந்தோஷ் (வயது 30). இவர் அங்குள்ள ஒரு துணி ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவரும், இந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி பகுதியை சேர்ந்த சர்மிளா (27)வும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இதையடுத்து சந்தோஷ் குடும்பத்துடன் மனைவியின் சொந்த ஊரான குருபரபள்ளிக்கு சென்று குடியேறினார். சில நாட்களுக்கு பிறகு மீண்டும் அவர் திருப்பூருக்கு வேலைக்கு சென்றார். விடுமுறை நாட்களில் மட்டும் குழந்தைகளை பார்த்து விட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் சந்தோஷ் கடந்த சில நாட்களுக்கு குழந்தைகளை பார்க்க வேண்டி வீட்டுக்கு வந்தார். அப்போது மனைவி சர்மிளா குழந்தைகளை பார்க்க கூடாது என்று கூறி சத்தம் போட்டதாக தெரிகிறது. குழந்தைகளை பார்க்க விடவில்லை என்றால் தற்கொலை செய்து விடுவேன் என சந்தோஷ் மிரட்டினார். ஆனாலும் குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை.

இதனால் மனம் உடைந்த சந்தோஷ் வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இன்று காலை சந்தோஷ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News