செய்திகள்
லாலாப்பேட்டை அருகே பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை
லாலாப்பேட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாலாப்பேட்டை:
லாலாப்பேட்டை அடுத்த மத்திப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ரோஜா (வயது17), இவர் லாலாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.
இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரோஜா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.