செய்திகள்

லாலாப்பேட்டை அருகே பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை

Published On 2017-11-23 12:24 GMT   |   Update On 2017-11-23 12:24 GMT
லாலாப்பேட்டை அருகே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

லாலாப்பேட்டை:

லாலாப்பேட்டை அடுத்த மத்திப்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் மகள் ரோஜா (வயது17), இவர் லாலாப்பேட்டை அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.

இந்த நிலையில் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த ரோஜா நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து லாலாப்பேட்டை இன்ஸ்பெக்டர் கோமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News