செய்திகள்

வைகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி

Published On 2017-11-23 12:18 GMT   |   Update On 2017-11-23 12:18 GMT
வைகை அணையில் மூழ்கி கல்லூரி மாணவர் பரிதாபமாக பலியானார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேவதானப்பட்டி:

தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே குள்ளப்புரத்தை சேர்ந்தவர் மணி மகன் பிரகதீஸ்(வயது19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி முதலாமாண்டு படித்து வந்தார்.

விடுமுறைக்காக சொந்தஊர் திரும்பிய பிரகதீஸ் நண்பர்களுடன் வைகை அணையை சுற்றி பார்க்க சென்றார்.

பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்த மாணவர்கள் தண்ணீர் வெளியேறும் இடத்திற்கு வந்தனர். கரையோரம் நின்றிருந்த பிரகதீஸ் திடீரென நிலைதடுமாறி அணைக்குள் விழுந்தார். நண்பர்கள் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. நீச்சல் தெரியாத பிரகதீஸ் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியானார்.

இதுகுறித்து வைகைஅணை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News