செய்திகள்

தோவாளை அருகே பெண்ணிடம் 8 பவுன் நகை பறிப்பு

Published On 2017-11-22 17:31 GMT   |   Update On 2017-11-22 17:31 GMT
பெண்ணிடம் 8 பவுன் நகையை மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பறித்து சென்றனர். இந்த சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்

தோவாளை அருகே அனந்தபத்மநாபபுரத்தை சேர்ந்தவர் ராஜகிருஷ்ணன். இவரது மனைவி ஜானகி (வயது 40). கணவன், மனைவி இருவரும் ஆரல்வாய்மொழியில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.

தோவாளை - லாயம் சாலையில் அவர்கள் சென்ற போது பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் ஜானகி கழுத்தில் கிடந்த 8 பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டனர்.

இதுபற்றி புகாரின் பேரில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News