கடையத்தில் பிளஸ்-2 மாணவி தூக்கு போட்டு தற்கொலை
நெல்லை:
நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் மகள் பவித்ரா (வயது17). இவர் அந்த பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். பவித்ராவின் தந்தையும், தாயும் பல வருடங்களுக்கு முன்பே இறந்து விட்டனர்.
இதனால் பவித்ராவை அவரது தாத்தா ராஜா (70) பராமரித்து வளர்த்து வந்தார். இந்த நிலையில் பவித்ரா தன்னுடன் படித்த ஆண் நண்பர்களுடன் பேசி பழகி உள்ளார். இதற்கு அவரது தாத்தா ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து பவித்ராவை கண்டித்தார்.
இதில் மனவேதனை அடைந்த பவித்ரா நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஏற்கனவே பவித்ரா குடும்பத்தில் அவர் மட்டுமே வாரிசாக வளர்ந்து வந்ததால், அவரது தாத்தா ராஜா மிகுந்த மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.