செய்திகள்
ஆண்டிப்பட்டி அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற நர்ஸ் மாயம்
ஆண்டிப்பட்டி அருகே ஆஸ்பத்திரிக்கு சென்ற நர்ஸ் மாயம்
தேனி:
ஆண்டிப்பட்டி அருகே மயிலாடும்பாறை வனத்தாய்புரம் பகுதியைச் சேர்ந்தவர் வீரய்யா மகள் விஜயலட்சுமி (வயது 21). நர்சிங் கோர்ஸ் முடித்து விட்டு தேனி பி.சி.பட்டி பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று வேலைக்கு சென்ற விஜயட்சுமி வீட்டுக்கு திரும்பவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை அக்கம் பக்கம் உள்ள நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
இதனால் மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் அவரது தந்தை வீரய்யா புகார் அளித்தார். அந்த புகாரில் தெய்வேந்திரபுரத்தைச் சேர்ந்த தங்கபாண்டி (22) என்பவர்தான் தனது மகளை கடத்தி இருக்க கூடும் என தெரிவித்துள்ளார்.
எனவே வழக்கு பதிவு செய்த போலீசார் இளம்பெண் மாயமானாரா? அல்லது கடத்தப்பட்டரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.