செய்திகள்

கோவையில் நண்பர் இறந்த துக்கத்தில் மருத்துவ பிரதிநிதி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2017-11-19 12:22 GMT   |   Update On 2017-11-19 12:22 GMT
கோவையில் நண்பர் இறந்த துக்கத்தில் மருத்துவ பிரதிநிதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை கணபதி தென்றல் நகரை சேர்ந்தவர் மகிம் அலிகான் (வயது 57). மருத்துவப் பிரதிநிதி. இவரது நண்பர் முரளி. பால்ய சினேகிதர்களான இவர்கள் பள்ளி படிப்பு வரை ஒன்றாகவே படித்தனர். அடிக்கடி சந்தித்து மகிழ்ந்தனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முரளி திடீரென இறந்தார். நண்பரின் இழப்பு மகிம் அலிகானை வேதனை அடைய செய்தது.

நண்பர் குறித்து அடிக்கடி குடும்பத்தினரிடம் கூறி புலம்பினார். குடும்பத்தினரும் அவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். இருந்தாலும் சமாதானம் அடையாத மகிம் அலிகான் குடிபோதைக்கு அடிமையானார். அப்போதும் தனது நண்பரை பற்றியே பேசி வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டார். சத்தம் கேட்டு குடும்பத்தினர் பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கிய நிலையில் துடித்துக்கொண்டிருந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அங்கு மகிம் அலிகானை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இது குறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News