செய்திகள்

கும்பகோணத்தில் கத்தியை காட்டி வியாபாரிக்கு கொலை மிரட்டல் ரவுடி கைது

Published On 2017-11-18 11:22 GMT   |   Update On 2017-11-18 11:22 GMT
கும்பகோணத்தில் கத்தியை காட்டி வியாபாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ரவுடியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம்பேட்டை, வடக்குத் தெருவை சேர்ந்தவர் கேசவன். இவருடைய மகன் அருண் (வயது 24). இவர் கும்பகோணம் பழைய பேட்டை ரவுண்டான அருகே பழக்கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று இரவு இவரது கடைக்கு ஒருவர் வந்து பழங்களை வாங்கி விட்டு பணம் தரமுடியாது என்று கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே அந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி அருணை மிரட்டினார். மேலும் அவரை தாக்கி கொலை செய்து விடுவேன் என்று கூறினார்.

இது குறித்து அருண் கும்பகோணம் தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் தகராறில் ஈடுபட்டவர் மதுரை நத்தம் பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் பாண்டி என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தாலுகா போலீசார் பாண்டியை கைது செய்தனர். அவர் மீது மதுரை போலீஸ் நிலையங்களில் பல கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன.

Tags:    

Similar News