செய்திகள்

சென்னைக்கு சொகுசு காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேர் கைது

Published On 2017-11-14 10:07 GMT   |   Update On 2017-11-14 10:07 GMT
புதுவையில் இருந்து சென்னைக்கு சொகுசு காரில் மதுபாட்டில் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேதராப்பட்டு:

கோட்டக்குப்பம் கலால் சோதனை சாவடியில் நேற்று மாலை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். அப்போது புதுவையில் இருந்து சென்னை நோக்கி சென்ற கேரள பதிவெண் கொண்ட சொகுசு காரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த காரில் விலை உயர்ந்த மதுபாட்டில்கள் ஏராளமாக இருந்தன. இதையடுத்து காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த சுதீஷ் (வயது30), பெங்களூரை சேர்ந்த ஜென்னா (46), மற்றும் சென்னை ஆயிரம்விளக்கு பகுதியை சேர்ந்த செல்வகுமார் (32) என்பதும் இவர்கள் புதுவையில் இருந்து சென்னைக்கு மதுபாட்டில்களை கடத்தி சென்றது தெரியவந்தது. இந்த மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.20 ஆயிரம் ஆகும். மேலும் காரின் மதிப்பு ரூ. 5 லட்சமாகும்.

இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் மதுபாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்டுத்திய காரையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News