செய்திகள்
திருவேங்கடம் அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
திருவேங்கடம் அருகே பூச்சி மருந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
சங்கரன்கோவில்:
திருவேங்கடம் அருகே உள்ள வெள்ளாகுளத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 49). இவரது உறவினர் கனகராஜ் (50). இவருக்கு தீராத வயிற்று வலி இருந்து வந்தது. இதனால் மன வேதனை அடைந்த கனகராஜ் வீட்டில் யாரும் இல்லாத போது பூச்சி மருந்தை குடித்தார்.
இதில் மயங்கிய நிலையில் கிடந்த கருப்பசாமியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருவேங்கடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.