செய்திகள்

குருவிகுளம் அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்

Published On 2017-11-13 10:31 GMT   |   Update On 2017-11-13 10:31 GMT
குருவிகுளம் அருகே இரண்டு குழந்தைகளுடன் இளம்பெண் மாயமானர்.
சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அடுத்த குருவிகுளம் அருகே உள்ள கீழரெங்கையாபுரத்தை சேர்ந்தவர் காசிப்பாண்டி (வயது 62). இவரது மகள் இளவரசி (27). இவருக்கு திருமணமாகி தனுஷ்கா (5), முதலாளி (3) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளன. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தவர் தந்தை வீட்டில் இருந்து வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று வயலுக்கு சென்று விட்டு வந்த காசிப்பாண்டி வீட்டில் மகள் மற்றும் பேரக்குழந்தைகள் யாரும் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து பல இடங்களில் தேடி பார்த்தும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

பின்னர் காசிப்பாண்டி இது குறித்து குருவிகுளம் போலிசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து 2 குழந்தைகளுடன் மாயமான இளவரசியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News