செய்திகள்
பெரியகுளம் அருகே தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்ம மரணம்
பெரியகுளம் அருகே தோட்டத்துக்கு சென்ற விவசாயி மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே டி.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் நாகப்பன்(வயது41) விவசாயி. இவருக்கு சோத்துப்பாறை சாலையில் வாழைத்தோட்டம் உள்ளது. சம்பவத்தன்று தோட்டத்துக்கு செல்வதாக நாகப்பன் கூறிச்சென்றுள்ளார்.
அதன்பின் இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார். தோட்டத்திற்கு சென்று பார்த்தனர். அங்கு நாகப்பன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து நாகப்பனின் உடலை கைப்பற்றி பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் நாகப்பன் கொலை செய்யப்பட்டாரா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.