search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி மர்ம மரணம்"

    திருவாடானை அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து அவரது சகோதரர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தொண்டி:

    திருவாடானை அருகே கருங்குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது53), விவசாயி. இவருக்கும், மனைவி கலா(50)வுக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்தது.

    இந்த நிலையில் கடந்த 14-ந்தேதி அதிகாலை அழும் சத்தம் கேட்டு சுப்பிரமணியத்தின் சகோதரர் வேலு பார்த்தபோது கலா மற்றும் அவரது உறவினர்கள் சுப்பிரமணியன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

    அருகில் சென்று பார்த்த போது சுப்பிரமணியத்தின் தலை மற்றும் கை-கால்களில் ரத்தக் காயம் இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த வேலு (55) திருவாடானை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    தகவலின்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×