செய்திகள்

திருமங்கலம் அருகே குடும்பத் தகராறில் வாலிபர் தீக்குளித்து பலி

Published On 2017-11-10 11:06 GMT   |   Update On 2017-11-10 11:06 GMT
திருமங்கலம் அருகே குடும்ப தகராறில் வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

பேரையூர்:

திருமங்கலம் அருகே உள்ள சாத்தங்குடி மேலத் தெருவைச் சேர்ந்த நாகலிங்கம் மகன் கண்ணன் (வயது 30). கூலித் தொழிலாளி. இவருக்கு ஆனந்தவள்ளி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கண்ணன் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். இதை வீட்டில் உள்ளவர்கள் கண்டித்தனர். மேலும் அவருக்கு மதுப்பழக்கமும் இருந்துள்ளது.

நேற்று இரவு மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்த கண்ணன், வீட்டில் உள்ளவர்களுடன் தகராறு செய்தார். அப்போது அவர், வீட்டில் இருந்த மண்எண்ணையை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் கருகியதால் அலறித்துடித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு திரண்டு வந்த அக்கம், பக்கத்தினர் கண்ணனை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News