செய்திகள்

முத்துப்பேட்டையில் இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை

Published On 2017-10-27 10:04 GMT   |   Update On 2017-10-27 10:04 GMT
முத்துப்பேட்டையில் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை பகுதி சாலியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயா(வயது35). இவர் முதல் கணவரிடம் இருந்து விவகாரத்தாகி 2-வதாக இந்திரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. முதல் கணவருக்கு பிறந்த பெண் குழந்தையுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை இந்திரஜித் கடைத் தெருவுக்கு சென்று விட்டாராம். அப்போது ஜெயாவின் தாயார் மகளை பார்க்க வந்தபோது அவர் தூக்கு மாட்டிய நிலையில் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். தகவலறிந்து வந்த இந்திரஜித் இதுபற்றி முத்துப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சந்தேகத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து குடும்ப பிரச்சினை காரணமாக ஜெயா தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறார்.
Tags:    

Similar News