செய்திகள்

வேலூர் ஜெயிலில் கைதிகள் 2 பேர் திடீர் உயிரிழப்பு

Published On 2017-10-26 09:34 GMT   |   Update On 2017-10-26 09:34 GMT
வேலூர் ஜெயிலில் கைதிகள் 2 பேர் இன்று காலை திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டு இறந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேலூர்:

வேலூர் அடுத்த கணியம்பாடியை சேர்ந்தவர் மோகன் (வயது 30). இவரை சாராயம் விற்பனை செய்ததாக கடந்த 19-ந் தேதி வேலூர் தாலுகா போலீசார் கைது செய்தனர். பின்னர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

இன்று காலை அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன் இறந்தார்.

ஆரணியை சேர்ந்தவர் வரதன் (வயது 68) நிலத்தகராறில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

கடந்த சில நாட்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டார். அவருக்கு ஜெயிலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று காலை உடல் நிலை மோசமானது. இதையடுத்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வரதன் இறந்தார்.

ஒரே நாளில் 2 கைதிகள் இறந்த சம்பவம் ஜெயிலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து ஜெயிலில் அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News