செய்திகள்

பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்படும் என நம்பிக்கை உள்ளது: தாயார் அற்புதம்மாள் உருக்கம்

Published On 2017-10-24 05:36 GMT   |   Update On 2017-10-24 05:36 GMT
பேரறிவாளன் பரோல் நீட்டிக்கப்படும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்பதாக அவரின் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
வேலூர்:

பேரறிவாளன் பரோல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. இது குறித்து அவரது தாயார் அற்புதம்மாள் கூறியதாவது:-

பேரறிவாளனின் தந்தைக்கு உடல் நிலை இன்னும் குணமாகவில்லை. அவர் நலமாகும் வரை பேரறிவாளன் உடன் இருக்க வேண்டுமென்று பரோலை நீட்டிக்க கேட்டு முதல் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளேன்.

இன்று மாலைக்குள் முதல்-அமைச்சரிடம் இருந்து நல்ல செய்தி வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன்.


அரசியல் கட்சி தலைவர்கள் பேரறிவாளன் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். எங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News