செய்திகள்

விழுப்புரத்தில் காரில் கடத்தப்பட்ட மதுபாட்டில்கள் பறிமுதல்: 2 பேர் கைது

Published On 2017-10-23 12:38 GMT   |   Update On 2017-10-23 12:38 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் காரில் கடத்தப்பட்ட ரூ.5 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்:

கோட்டக்குப்பம் மதுவிலக்கு இன்ஸ்பெக்டர் அரிகரன் தலைமையிலான போலீசார் விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச்சாலையில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர்.

அப்போது காரில் அட்டைப்பெட்டிகளில் 960 மதுபாட்டில்களும் 5 கேன்களில் 175 லிட்டர் சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் காரில் இருந்தவர்கள் விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த பாலா(45) மலையரசன் குப்பத்தைச் சேர்ந்த செல்வி(45) என்பதும் புதுவையிலிருந்து தமிழக பகுதிக்கு மதுப்பாட்டில்களை கடத்தி சென்றதும் தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். கார் மற்றும் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மொத்த மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
Tags:    

Similar News