செய்திகள்
ஆந்திராவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்தல்: 2 பேர் கைது
சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு வேனில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் போலீஸ் நிலையம் எதிரே உள்ள போலீஸ் சோதனைச் சாவடியில் இன்று அதிகாலை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கிச்சென்ற ஒரு மினி வேனை போலீசார் மடக்கி சோதனை செய்தனர். அதில் தலா 50 கிலோ எடை கொண்ட 40 மூட்டை ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
திருநின்றவூரில் இருந்து ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்த முயன்றது தெரியவந்தது. வேன் டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் வேன் டிரைவர் மன்னார்குடியைச் சேர்ந்த ஜீவா, புளியந்தோப்பை சேர்ந்த ரஞ்சித் என்பது தெரியவந்தது.