செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் திடீரென தூறல் மழை பெய்ய துவங்கியது.ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
தஞ்சாவூர்:
வங்கக்கடல் பகுதியில் உருவான வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்தில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது. மாலையில் மேக மூட்டத்துடன் காணப்பட்ட வானம் திடீரென தூறல் மழை பெய்ய துவங்கியது.ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் ரோட்டோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது.
நேற்று பெய்த மழை காரணமாக வெப்பம் நீங்கி குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல் திருவாரூர், நாகை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மழை காரணமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இரவில் மின்சாரம் இல்லாமல் சிரமம் அடைந்தனர்.