செய்திகள்

ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டில் நகை கொள்ளை

Published On 2017-10-21 11:06 GMT   |   Update On 2017-10-21 11:06 GMT
ஒட்டன்சத்திரம் அருகே விவசாயி வீட்டுக்குள் புகுந்து நகை திருடிச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஒட்டன்சத்திரம்:

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே செம்டைப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது45). இவர் தோட்டத்து வீடு வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

சம்பவத்தன்று வீட்டு அருகே உள்ள தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சிக்கொண்டிருந்தார். இவரது மனைவி தோட்ட வேலையில் ஈடுபட்டிருந்தார். அப்போது மர்ம நபர் ஒருவர் வீட்டில் இருந்து தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணி மற்றும் அவரது மனைவி வீட்டுக்குள் சென்று பார்த்தனர்.

வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தது. பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் தங்க நகை கொள்ளை போனதும் தெரிய வந்தது. இதனால் கணவன்-மனைவி சத்தம் போட்டனர். இருந்தபோதும் மர்ம நபர் மின்னல் வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்று மறைந்தார்.

இது குறித்து ஒட்டன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர். பட்டபகலில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News