செய்திகள்

நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து 23-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் உத்தரவு

Published On 2017-10-21 10:08 GMT   |   Update On 2017-10-21 10:08 GMT
நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்தில் இருந்து 23-ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.



வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்க பாசனப் பகுதி மற்றும் உடையார்குளப் பாசனப் பகுதிகள் பயனடையும் வகையில் நல்லதங்காள் ஓடை நீர்த்தேக்கத்திலிருந்து 23.10.2017 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். இதனால், திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்திலுள்ள 4831 ஏக்கர் நிலங்கள் பயன்பெறும்.

மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News