செய்திகள்

திருப்பூரில் லாரியின் பின் சக்கரத்தில் சிக்கி இளம்பெண் பலி

Published On 2017-10-14 11:16 GMT   |   Update On 2017-10-14 11:16 GMT
திருப்பூரில் இன்று காலை மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
திருப்பூர்:

திருப்பூர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் தங்கதுரை. பெயிண்டிங் காண்டிராக்டர். இவரது மகள் நந்தினி (வயது 18). இவர் தனது தந்தைக்கு உதவியாக இருந்து வந்தார். இன்று காலை தங்கதுரை மற்று நந்தினி ஆகியோர் பல்லடம்- தாராபுரம் ரோட்டில் நடைபெற்று வரும் பெயிண்ட் அடிக்கும் பணிக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.

மோட்டார் சைக்கிள் குமரன் ரோடு அருகே சென்ற போது அந்த வழியாக வந்த லாரி மோட்டார் சைக்கிளை முந்த முயன்றது. அப்போது மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் நிலைதடுமாறி தங்கதுரை, நந்தினி ஆகியோர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தனர். அப்போது டிப்பர் லாரியின் பின் சக்கரம் நந்தினியின் தலையில் ஏறி இறங்கியது.

இதில் சம்பவ இடத்திலேயே தந்தை கண்முன்னே நந்தினி தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார். மகளின் உடலை பார்த்த தந்தை கதறி அழுதார்.

இந்த தகவல் கிடைத்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நந்தியின் உடலை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News