செய்திகள்

பெரியகுளம் அருகே தொழிலாளி வீட்டில் தீ விபத்து: பொருட்கள்-பணம் எரிந்து நாசம்

Published On 2017-10-12 14:17 GMT   |   Update On 2017-10-12 14:17 GMT
பெரியகுளம் அருகே தொழிலாளி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் மற்றும் பணம் எரிந்து நாசமானது.

தேனி:

பெரியகுளம் அருகே ஜி.வாடிப்பட்டி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ராஜா (வயது 30). கூலித் தொழிலாளியான இவர் சம்பவத்தன்று அரப்படி தேவன்பட்டியில் நடந்த திருவிழாவுக்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மண்எண்ணை விளக்கு தவறி விழுந்ததில் தீ பற்றியது. இந்த தீ தொடர்ந்து பரவியதால் வீடு முழுவதும் எரிந்து நாசமானது. அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைத்து ராஜாவுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதிர்ச்சியடைந்த ராஜா வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பணம் ரூ.10 ஆயிரம், ¼ பவுன் நகை மற்றும் பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ளது. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News