செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே கணவன் கண் முன் மனைவி விபத்தில் பலி

Published On 2017-10-10 11:06 GMT   |   Update On 2017-10-10 11:06 GMT
ஆண்டிப்பட்டி அருகே கணவன் கண் முன் மனைவி விபத்தில் பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆண்டிப்பட்டி:

தேனி மாவட்டம் போடி அணைப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயகுமார். அவரது மனைவி ஈஸ்வரி (வயது 35). இவர்கள் 2 பேரும் உறவினரை பார்ப்பதற்காக கடமலைக்குண்டுவுக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

பின்னர் அங்கிருந்து ஊருக்கு வந்து கொண்டு இருந்தனர். கே.கே.புலியூர் என்ற பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த தனியார் பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

உயிருக்கு போராடிய 2 பேரையும் அக்கம் பக்கம் உள்ளவர்கள் தூக்கிக் கொண்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஈஸ்வரி இறந்தார். விஜயகுமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பஸ் டிரைவர் வேல்முருகன் என்பவரை கைது செய்தனர்.

Tags:    

Similar News