செய்திகள்
கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளம்:
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ளது கும்பக்கரை அருவி. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கொடைக்கானல் மலைப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
எனவே சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால் விடுமுறையை கழிக்க குடும்பத்துடன் வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்தனர்.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து சீரான அளவு தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் இன்று முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். இதனால் சுற்றுலா பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.