search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கும்பக்கரை அருவி"

    • கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.
    • வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கும்பக்கரை அருவி. இது மேற்குதொடர்ச்சி மலையடிவாரத்தில் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.

    வடகிழக்கு பருவமழை கொட்டி தீர்த்தத்தால் அருவிக்கு அதிகளவு தண்ணீர் வந்தது. இதனால் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் அதிகளவில் குளித்து செல்கின்றனர். நேற்று கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தாமோதரன் என்பவர் தனது நண்பர்களுடன் குளிக்கவந்தார்.

    அருவியில் குளித்து கொண்டிருந்தபோது அவர் கையில் வந்திருந்த 6.5 கிராம் தங்க மோதிரத்தை தண்ணீரில் தவறவிட்டார். இதுகுறித்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வனத்துறை அலுவலர்களிடம் தெரிவித்தார். இதனையடுத்து தாமோதரன் தவறவிட்ட மோதிரத்தை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட்ராஜா சுற்றுலா பயணியான தாமோதரனை வரவழைத்து அவருடைய தங்க மோதிரத்தை ஒப்படைத்தார்.

    மோதிரம் காணாமல் போன ஒரேநாளில் அதனை மீட்டு கொடுத்த வனத்துறையினரை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

    • தொடர்மழை காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
    • அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே குளிர்ச்சியான ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குதொடர்ச்சி மலையாடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். அருவியில் நீர்பிடிப்பு பகுதிகளான வட்டக்காணல், வெள்ளகவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர்மழை காரணமாக கடந்த மாதம் 3-ந்தேதி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க வனத்துறையினர் தடைவிதித்தனர். மேலும் அருவியை கண்காணித்து வந்தனர். நீர்வரத்து சீராகாததால் 43 நாட்களாக தொடர்ந்து தடைவிதிக்கப்பட்டது. இந்தநிலையில் இன்று நீர்வரத்து சீரானதால் கும்பக்கரை அருவியில் குளிக்க வனத்துறையினர் அனுமதி வழங்கினர். தற்போது சபரிமலை சீசன் நடைபெற்று வருவதால் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் அதிகாலை முதலே கும்பக்கரை அருவியில் குளித்து மகிழ்ந்தனர். அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே குளிர்ச்சியான ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்தனர்.

    மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் கும்பக்கரை அருவிக்கு வந்திருந்ததால் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    • கும்பக்கரை அருவில் கடந்த 20 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்புவரை வடகிழக்கு பருவமழை வெளுத்துவாங்கியது. தீபாவளி பண்டிகைக்கு பிறகு மழையின் தீவிரம் படிப்படியாக குறைந்து நின்றுவிட்டது. தற்போது நேற்று மீண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

    போடி, உத்தமபாளையம், பெரியகுளம், தேவதானப்பட்டி, வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது. பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவில் கடந்த 20 நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அங்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு மாதமாக அதன் முழுகொள்ளளவிலேயே உள்ளது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதேபோல் மஞ்சளாறு அணையின் நீர்மட்டமும் முழுகொள்ளளவை எட்டி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    முல்லைபெரியாறு அணையின்நீர்மட்டம் 133.75 அடியாக உள்ளது. வரத்து 1284 கனஅடி, திறப்பு 1000 கனஅடி, இருப்பு 5575 மி.கனஅடி.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.82 அடி, வரத்து 1690 கனஅடி, திறப்பு 2099 கனஅடி, இருப்பு 5208 மி.கனஅடி.

    மஞ்சளாறு அணையின்நீர்மட்டம் 55 அடி, வரத்து மற்றும் திறப்பு 100 கனஅடி, சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 126.60 அடி, வரத்து மற்றும் திறப்பு 142 கனஅடி.

    பெரியாறு 16.2, தேக்கடி 13.6, கூடலூர் 8.6, உத்தமபாளையம் 18.4, சண்முகாநதி அணை 7..8, போடி 52.4, வைகை அணை 12, மஞ்சளாறு 46, சோத்துப்பாறை 47, பெரியகுளம் 67, வீரபாண்டி 27.6, அரண்மனைப்புதூர் 12.6, ஆண்டிபட்டி 6.2 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
    • சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ள ப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பணிகள் பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    இன்று 9-வது நாளாக நீர்வரத்து சீராகவில்லை. தொடர்ந்து அதிக அளவு தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதால் அருவிக்கு செல்ல தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவி யில் கடந்த 6 நாட்களுக்கு முன்பு நீர்வரத்து அதிகரித்ததால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இன்றும் அதிக அளவில் வெள்ள ப்பெருக்கு இருந்ததால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். அருவிக்கு வருபவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றனர்.

    • வெள்ளப்பெருக்கால் கும்பக்கரை அருவியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தடைவிதித்தனர்.
    • 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    கூடலூர்:

    கொடைக்கானலில் பெய்த கனமழை காரணமாக பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடி வாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறை யினர் தடைவிதித்தனர்.

    தற்போது மழை குறைந்து சீரான நீர்வரத்து உள்ளது. இதனால் 9 நாட்களுக்கு பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது காலாண்டு விடு முறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கும்பக்கரை வந்தனர்.

    அவர்கள் உற்சாகமாக அருவியில் குளித்து மகிழ்ந்தனர். வனத்துறை யினர் நீர்வரத்தை கண்கா ணித்து வருகின்றனர். மேலும் சுற்றுலா பயணி களின் பாதுகாப்பு அம்சங்க ளையும் மேம்படுத்தி வருகின்றனர்.

    முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 119.45 அடியாக உள்ளது. 509 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 400 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.62 அடியாக உள்ளது. 102 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 53.30 அடியாக உள்ளது. 46 கனஅடிநீர் வருகிறது. திறப்பு இல்லை. விரைவில் முழுகொள்ள ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 89.70 அடியாக உள்ளது. 9 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    பெரியாறு 25.4, தேக்கடி 26.2, கூடலூர் 0.8, சண்முகா நதி அணை 1, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 2, பெரி யகுளம் 3.6 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
    • கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது.
    • காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. கொடைக்கானலில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர் வரத்து இருக்கும். தேனி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவிக்கு வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக கொடைக்கானலில் பெய்து வரும் தொடர் மழையால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி அங்கு செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இன்றும் நீர்வரத்து சீராகாததால் 6-வது நாளாக தடை தொடரும் என அறிவிக்கப்பட்டது.

    நேற்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். தடை காரணமாக அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் கடந்த 15-ந் தேதி யானைகள் கூட்டமாக முகாமிட்டதால் தடை விதிக்கப்பட்டது. யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிய பின்னர் 18-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர். இந்த நிலையில் வெண்ணியாறு பீட் பகுதியில் இருந்து மீண்டும் 3 யானைகள் சுருளி அருவியில் நடமாடியதால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது. இதுகுறித்த அறிவிப்பு பலகை சோதனை சாவடியில் வைக்கப்பட்டுள்ளது.

    காட்டு யானை நடமாட்டத்தை தொடர்ந்து வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றதை உறுதி செய்த பின்னரே சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 119.40 அடியாக உள்ளது. 406 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர்மட்டம் 48.59 அடியாக உள்ளது. 194 கன அடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 52.40 அடியாக உள்ளது. 44 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 87.57 அடியாக உள்ளது. 26 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாரில் மட்டும் 2 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

    • வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது.

    கூடலூர்:

    தென்மேற்கு பருவமழை தொடங்கியதில் இருந்து அவ்வப்போது மழை பெய்வதும், சில நேரங்களில் ஏமாற்றி செல்வதுமாக உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

    இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 415 கன அடியாக உள்ளது. தொடர்ந்து மழை பெய்வதால் விவசாயத்திற்கு தண்ணீர் தேவை குறைந்துள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு 511 கனஅடியில் இருந்து 400 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் 118.85 அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 47.83 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக நீர்வரத்து இல்லாமல் இருந்தது. அதனைத் தொடர்ந்து மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை 378 கன அடி நீர் வருகிறது. அணையில் இருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 69 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 50.50 அடியாக உள்ளது. 84 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 78.55 அடியாக உள்ளது. 6 கனஅடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

    கொடைக்கானல் வட்டக்கானல், வெள்ளக்கவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கன மழையால் மேற்கு தொடர்ச்சி மலைஅடிவாரத்தில் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி கும்பக்கரை அருவியில் குளிக்க, சுற்றி பார்க்க தடை விதிக்கப்படுவதாகவும், நீர்வரத்து சீரான பின்னர் அனுமதிக்கப்படும் என வனச்சரக அலுவலர் டேவி ட்ராஜன் தெரிவித்துள்ளார்.

    இதேபோல் கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் காரணமாக கடந்த ஒரு வாரமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து அதிகரித்துள்ளது. இருந்தபோதும் யானைகள் அங்கேயே முகாமிட்டுள்ளதால் மறுஉத்தரவு வரும் வரை தடை தொடரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    பெரியாறு 2.8, தேக்கடி 1.4, கூடலூர் 1.6, உத்தமபாளையம் 1.2, சண்முகநாதி அணை 2, போடி 0.6, வைகை அணை 0.6, மஞ்சளாறு 3, சோத்துப்பாறை 3, பெரியகுளம் 1.2, வீரபாண்டி 1.2, ஆண்டிபட்டி 6.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது.
    • ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் நடப்பாண்டு பருவமழை பொய்த்துப்போன நிலையில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

    இதனால் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 306 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 620 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 118.25 அடியாக உள்ளது. அணையிலிருந்து 300 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. நீர்இருப்பு 2312 மி.கனஅடியாக உள்ளது.

    இதேபோல் வைகை அணையின் நீர்பிடிப்பு பகுதியிலும் நேற்று கனமழை பெய்தது. வைகை அணையில் மட்டும் 15 செ.மீ மழை கொட்டியது. இதனால் அணையின் நீர்மட்டம் 47.08 அடியாக உயர்ந்தது. நேற்று 41 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 331 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து 69 கனஅடிநீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 1630 மி.கனஅடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணைக்கு நேற்று நீர்வரத்து இல்லாமல் இருந்தது. இன்று காலை அணைக்கு 108 கனஅடி நீர் வருகிறது. நீர்மட்டம் 48.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 312.32 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 73.80 அடியாக உள்ளது. நீர்வரத்து 47 கனஅடி, திறப்பு 3 கனஅடி, நீர் இருப்பு 33.34 மி.கனஅடி.

    கனமழை காரணமாக கும்பக்கரை அருவிக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த 2 நாட்களாக அதிகளவு சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனர். இன்று காலை முதல் தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததால் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடைவிதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகள் யாரும் வரவேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டது. இதனால் வார விடுமுறை நாட்களில் அருவிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

    பெரியாறு 39, தேக்கடி 13.4, கூடலூர் 2.6, உத்தமபாளையம் 3.2, சண்முகாநதி அணை 7.4, போடி 18.8, வைகை அணை 150.2, சோத்துப்பாறை 61, மஞ்சளாறு 85, பெரியகுளம் 80.4, வீரபாண்டி 11.2, அரண்மனைப்புதூர் 24, ஆண்டிபட்டி 98.2 மி.மீ மழையளவு பதிவானது.

    ஆண்டிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பெய்த கனமழை காரணமாக நேற்று இரவு முதல் விட்டுவிட்டு மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

    • அய்யப்ப சீசன் என்பதால் பக்தர்களின் வருகையும் சுருளி அருவிக்கு அதிகரித்துள்ளது.
    • திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் குளித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ளது கும்பக்கரை அருவி. இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் வந்து குளித்து மகிழ்ந்து செல்கின்றனர்.

    ஆபத்தான குளியல்

    தற்போது அய்யப்ப சீசன் என்பதால் அய்யப்ப பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி வட்டக்கானல் மற்றும் கொடைக்கானல் பகுதியில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.

    இதனால் கும்பக்கரை அருவியில் நேற்று மதியம் 1 மணி முதல் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.மேலும் அருவியின் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த வனக்காவலர்கள் அருவிக்கு வரும் நீர் வரத்து அதிகரிப்பதை கண்டு அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் அனைவரையும் உடனடியாக வெளியே ற்றினர்.

    இதனைத் தொடர்ந்து கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணி களுக்கு வனத்துறையினர் தடை விதித்து அருவியில் ஆர்ப்பரித்து செல்லும் வெள்ளைப்பெருக்கை பார்ப்பதற்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் சுற்றுலா பயணிகளின் மிகுந்த ஆர்வத்தினால் அருவிக்கு மேல் நீர் தேங்கி செல்லும் பகுதியில் பெண்கள், குழந்தைகள் என அனைவரும் குளித்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இது ஆபத்தானது என்பதால் விபரீதம் உணராமல் விளையாடும் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.08 அடி. வரத்து 15 கனஅடி.

    கூடலூர்:

    தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக பெரியகுளம், தேவதானப்பட்டி, வடுகப்பட்டி, போடி, ஆண்டிபட்டி, கூடலூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் பெய்து வரும் மழையினால் மானாவாரி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    கன மழை காரணமாக அணைகளுக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 127.05 அடியாக இருந்தது. இன்று காலை அணையின் நீர்மட்டம் 127.15 அடியாக உயர்ந்துள்ளது. இதேபோல் நேற்று 553 கன அடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1426 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து 1267 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 4082 மி.கன அடியாக உள்ளது. கூடுதல் தண்ணீர் திறப்பால் லோயர்கேம்ப் மின் நிலையத்தில் 4 ஜென ரேட்டர்கள் இயக்கப்பட்டு மின்சார உற்பத்தி நடைபெற்று வருகிறது.

    வைகை அணையின் நீர்மட்டம் 67.22 அடியாக உள்ளது. வரத்து 948 கன அடி. திறப்பு 879 கன அடி. இருப்பு 5140 மி.கன அடி. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 55 அடி. வரத்து 20 கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 118.08 அடி. வரத்து 15 கனஅடி. திறப்பு 3 கன அடி. இருப்பு 86.64 மி. கன அடி.

    கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். தற்போது தேனி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பெரியாறு 22.4, தேக்கடி 25.2, கூடலூர் 2.8, உத்தமபாளையம் 11.4, சோத்துப்பாறை 17, போடி 2.8, பெரியகுளம் 32 மி.மீ. மழை அளவு பதிவானது.

    ×