செய்திகள்

உளுந்தூர்பேட்டையில் ஓட்டல் அருகே அழுகிய நிலையில் பெண் பிணம்: கற்பழித்து கொலையா?

Published On 2017-09-25 11:51 GMT   |   Update On 2017-09-25 11:51 GMT
உளுந்தூர்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர ஓட்டல் அருகே முட்புதரில் அழுகிய நிலையில் பெண் பிணமாக கிடந்தார்.
திருநாவலூர்:

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சாலையோர ஓட்டல் அருகே முட்புதர் உள்ளது.

இந்த இடத்தில் இருந்து பயங்கர துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் சந்தேகம் அடைந்து முட்புதருக்குள் சென்று பார்த்தனர்.

அங்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாண கோலத்தில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப்-இன்ஸ்பெக்டர் ராஜமன்னார், தனிப்பிரிவு ஏட்டுகள் தன்ராஜ், அழகு செந்தில் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

அங்கு கிடந்த பெண்ணின் உடலை பார்வையிட்டனர். அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த பெண் யார்? அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது கற்பழித்து கொலை செய்து பிணத்தை முட்புதரில் வீசி சென்றார்களா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News