செய்திகள்

தனியார் கல்லூரி பஸ் மோதி விவசாயி பலி

Published On 2017-09-21 14:58 GMT   |   Update On 2017-09-21 14:58 GMT
காரிமங்கலம் அருகே தனியார் கல்லூரி பஸ் மோதிய விபத்தில் விவசாயி சம்பவ இடத்திலேயே பலியானார்.
காரிமங்கலம்:

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த செல்லன ஹள்ளி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 55). விவசாயி. இவரது மகன் எலக்ட்ரிக்கல் கடை வைத்து உள்ளார். பஸ்சில் மகனுக்கு சாப்பாடு அனுப்பி வைப்பார்.

அதன்படி இன்று காலை சாப்பாடு எடுத்து வந்து பஸ் ஸ்டாப்பில் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அந்த வழியாக வந்த தனியார் கல்லூரி பஸ் இவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.

அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு விபத்தில் பலியான விவசாயி கோவிந்தசாமி உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News