திருக்காட்டுப்பள்ளி அருகே தாயை கத்தியால் குத்தி கொன்ற மகன் கைது
பூதலூர்:
திருக்காட்டுப்பள்ளியை அடுத்த வரகூர் மாதா கோவில் தெருவைச் சேர்ந்த விவசாய கூலிதொழிலாளி செபாஸ்டின்(வயது 65) இவருடைய மனைவி ஜெயராணி(60). இவர்களுக்கு மூன்று மகன்கள். மூத்தமகன் ராஜா(39)திருமணம் ஆகி ஒரு பெண் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ராஜா மின்சார பழுது நீக்கும் தொழில்செய்து வந்ததாகவும், அவ்வப்போது பெங்களூர் மற்றும் திருப்பூர் சென்று வந்து கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
வரகூர் மாதா கோவில் தெருவில் தந்தையும் தாயும் வசித்து வந்த நிலையில் ராஜா மட்டும் அதே தெருவில் வேறு இடத்தில் வசித்து வந்துள்ளார். தனக்கு சொத்துபிரித்து தரக் கேட்டு அவ்வப்போது தனது தந்தை மற்றும் தாயிடம் தகறாறு செய்துள்ளார்.நேற்று இரவும் அதே போல் தன் தாயிடம் சொத்து கேட்டு தகறாறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் முற்றிய நிலையில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜா ஜெயராணியை குத்தினார். தடுக்க வந்த செபாஸ்டினுக்கும் கத்திக் குத்து விழுந்தது. இதைத்தொடர்ந்து பலத்த காயம் மடைந்த இருவரையும் மீட்டு 108 ஆம்பலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். அங்குசிகிச்சை பலன் அளிக்காமல் ஜெயராணி இன்று அதிகாலை உயிரிழந்தார். செபாஸ்டின் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இது பற்றி தகவல் கிடைத்ததும் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து அலெக்ஸ் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.