செய்திகள்

ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து நகை கொள்ளை

Published On 2017-09-17 12:23 GMT   |   Update On 2017-09-17 12:23 GMT
ஆண்டிப்பட்டி அருகே வீடு புகுந்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

ஆண்டிப்பட்டி அருகே கே.புலியூர் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி வசந்தி. இருவரும் வேலைக்கு செல்வதால் வீட்டை பூட்டி சாவியை ஜன்னல் ஓரம் வைத்துச் சென்றனர்.

இதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சாவியை எடுத்து பூட்டைத் திறந்து வீட்டுக்குள் புகுந்தனர். பீரோவை உடைத்து உள்ளே இருந்த 5 பவுன் மதிப்புள்ள தங்க செயின், தோடு, வெள்ளி கொலுசு ஆகியவற்றை திருடிச் சென்றனர். வீடு திரும்பிய செல்வம் பொருட்கள் சிதறிக் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போனது தெரிய வந்தது.

இது குறித்து கடலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து துணிகர கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News