செய்திகள்
விருதுநகரில் அம்மன் கோவிலில் கொள்ளை
விருதுநகரில் அம்மன் கோவிலில் தாலி மற்றும் வெள்ளிப் பொருட்களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம மனிதர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விருதுநகர்:
விருதுநகர் ஏ.முக்குளத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன்-பாலகுருநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பூஜை முடிந்ததும் நேற்று நடை சாத்தப்பட்டது.
வழக்கம் போல் இன்று காலை நடைதிறப்புக்காக பூசாரி துரைராஜ் வந்தார். கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் கோவிலின் உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு அம்மன் கழுத்தில் அணிவிக்கப்பட்டிருந்த 3 பவுன் தாலி மற்றும் கோவிலில் இருந்த 2 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருட்டு போயிருந்தது.
இது குறித்து அவர் ஏ. முக்குளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள்.