மதுரையில் நாளை தே.மு.தி.க. நிர்வாகி இல்ல திருமணம்: விஜயகாந்துக்கு 4 இடங்களில் வரவேற்பு
பேரையூர்:
மதுரை தெற்கு மாவட்ட தே.மு.தி.க. பொறுப்பாளர் அழகர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்ப தாவது:-
தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவன தலைவர் விஜயகாந்த் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் மலைச்சாமி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு தலைமையேற்று நடத்தி வைக்கிறார்.
மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் சார்பில் பொறுப்பாளரான எனது தலைமையில் திருப்பரங்குன்றம் தனியார் கல்லூரி ரெயில்வே கேட் அருகிலும், மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பாலசந்தர் தலைமையில் தனமணி மகால் அருகிலும், மாநகர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட பொறுப்பாளர் கவியரசு தலைமையில் பசுமலை பி.ஆர்.சி. டெப்போ அருகிலும் மாநகர் தெற்கு மாவட்டம் சார்பாக மாவட்ட செயலாளர் சிவ முத்துக்குமார் தலைமையில் பசுமலை நுழைவு வாயில் அருகிலும் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.
இந்த வரவேற்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட, கிளை நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.