செய்திகள்

கும்மிடிப்பூண்டி அருகே மதுபாட்டில் பதுக்கி விற்ற வாலிபர் கைது

Published On 2017-09-08 09:09 GMT   |   Update On 2017-09-08 09:09 GMT
கும்மிடிப்பூண்டி அருகே மதுபாட்டில் பதுக்கி கூடுதல் விலைக்கு விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து மதுபாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.
கும்மிடிப்பூண்டி:

கும்மிடிப்பூண்டி மது விலக்கு அமலாக்கப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வரதராசன் தலைமையில் போலீசார் ஆரம்பாக்கம் அடுத்த அரும்பாக்கம் சோதனைச்சாவடியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியே பையுடன் நடந்து வந்த வாலிபரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர்.

அவர் கெட்ணமல்லி கிராமத்தைச் சேர்ந்த சம்பத் என்பதும், அவர் வைத்திருந்த துணிப்பையில் 20 மதுபாட்டில்கள் இருப்பதும் தெரிந்தது.

அதனை சாலையோரத்தில் நிற்கும் லாரியின் டிரைவர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்க வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து சம்பத்தை கைது செய்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News