செய்திகள்
அமைச்சர்கள் சென்னை வர எடப்பாடி பழனிச்சாமி உத்தரவு: பொதுக்குழுவை கூட்ட திட்டமா?
வெளியூர்களில் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னையில் இருக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
அ.தி.மு.க.வின் இரண்டு பிரதான அணிகள் இணைந்த பின்னர், அவர்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதன்மூலம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
இதற்கிடையே அணிகள் இணைப்பின்போது, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதற்காக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றும் தகவல் வெளியானது.
இந்த சூழ்நிலையில், அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னையில் இருக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
அ.தி.மு.க.வின் இரண்டு பிரதான அணிகள் இணைந்த பின்னர், அவர்களுக்கு எதிராக செயல்பட்டுவரும் டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் உள்ள விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அளிக்கும் ஆதரவை திரும்ப பெறுவதாக ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளனர். இதன்மூலம், எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற எச்சரிக்கை மணி அடித்துள்ளனர்.
இதற்கிடையே அணிகள் இணைப்பின்போது, சசிகலாவை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது. இதற்காக பொதுக்குழு விரைவில் கூட்டப்படும் என்றும் தகவல் வெளியானது.
இந்த சூழ்நிலையில், அமைச்சர்கள் அனைவரும் நாளை சென்னையில் இருக்கும்படி முதலமைச்சர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார். பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தலாம் என தகவல் வெளியாகி உள்ளது.